News April 23, 2025

தூத்துக்குடி: செம்மொழி தின பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி

image

செம்மொழி தினம் வரும் ஜூன் 3 கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட 11,12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களிடையே செம்மொழி குறித்த பேச்சு & கட்டுரைப் போட்டிகள் ஜூன் 9 -ல் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://tamil valarchi.tn.gov.in இணைய தளத்தில் தலைமையாசிரியர் / முதல்வர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்கலாம். தகவலை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 23, 2025

தூத்துக்குடி:ஆத்தூர் வெற்றிலையின் ருசியின் ரகசியம்

image

ஆத்தூர் வெற்றிலைக்கு 2023-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வெற்றிலை காரத்தன்மை கொண்ட ருசியுடன் காணப்படுகிறது. ஆத்தூர் வெற்றிலை ருசியின் ரகசியம் இப்பகுதியில் பாய்ந்து ஓடும் தாமிரபரணி ஆற்றின் நீர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. செரிமான சக்தியை ஊக்குவிக்கும் ஆத்தூர் வெற்றிலை இந்தியா முழுவதும் ஏற்றுமதி ஆகிறது. *SHAREIT*

News April 23, 2025

மத்திய அரசுக்கு தூத்துக்குடி எம்பி கடிதம்

image

காலநிலை மாற்றத்தின் பல்வகை தாக்கங்களைக் கணக்கில் கொண்டு வெப்ப அலைக் கணக்கிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். வெப்பநிலையையும் தாண்டி, அதிகரித்து வரும் காற்றின் ஈரப்பதம்(Humidity) உள்ளிட்ட இதர காரணிகளையும் கருத்தில் கொண்டு வெப்ப அலையை தீர்மானிக்க வேண்டும் என தூத்துக்குடியி எம்பி கனிமொழி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News April 23, 2025

திருச்செந்தூர் கோவில் குறித்து நீதிமன்றம் உத்தரவு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றி கட்டுமான பணிகள் நடத்த வேண்டும் என ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து சுற்றுச்சூழல் துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கடலோர ஒழுங்காற்று குழும அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!