News April 6, 2025
தூத்துக்குடி சிறுவன் கொலையில் இரட்டை ஆயுள்

எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2019 -ம் ஆண்டில் 6 வயது சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்த அருண்ராஜ் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளிக்கு 2 ஆயுள் தண்டனைகள் மற்றும் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.30,000 அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
Similar News
News April 8, 2025
நாளை காவல்துறை குறை தீர்ப்பு நாள் கூட்டம்

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது, அந்த வகையில் நாளை (ஏப்ரல் 9) நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், பொதுமக்கள், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
தூத்துக்குடியில் மனதை மயக்கும் மயில் தோட்டம் தெரியுமா?

ஓட்டப்பிடாரம் அருகே கேரளாவைச் சேர்ந்தவர் 1980 ஆண்டு, 58 ஏக்கரில் தோட்டம் ஒன்றை அமைத்து, மா, தென்னை, கொய்யா என பல மரங்களை நட்டார். சில ஆண்டுகளில் இந்த தோட்டத்திற்கு ஒரு சில மைல்கள் வர ஆரம்பித்தன. இப்போது இத்தோட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மையில்கள் உள்ளன. பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் இந்த தோட்டம், மயில்களுக்கான தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதை அனைவரும் கண்டு மகிழ SHARE பண்ணுங்க
News April 8, 2025
ஈசன் தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கும் முறப்பநாடு திருத்தலம்

முறப்பநாடு கோவில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. நவகயிலாயத்தில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பாக சிவபெருமான் குருபகவானாக அமர்ந்து அருள்பாலிக்கும் சிறப்பு இங்கு மட்டுமே உண்டு.புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வதால் தட்சிண கங்கை என்று பெயர். இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள்.