News November 8, 2025

தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டு சிறை

image

கோவில்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கயத்தாறை தேர்ந்த காளீஸ்வரன் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் காளீஸ்வரனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

Similar News

News November 8, 2025

தூத்துக்குடி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 8, 2025

தூத்துக்குடி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

திருச்செந்தூர் கடற்கரையில் தங்க இனி அனுமதி இல்லை

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி வந்த நிலையில், திருட்டு மற்றும் பொருள்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் காரணமாக கடற்கரையில் இரவு யாரும் கடற்கரையில் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!