News September 8, 2025

தூத்துக்குடி: சான்றிதழ் தொலைந்தால் என்ன செய்யலாம்?

image

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. தேவையுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

Similar News

News September 8, 2025

தூத்துக்குடி விவசாயிகள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் அரசு மானிய விலையில் பம்பு செட்டுகள் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மின்னிணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகள் 15 குதிரை திறன் வரையிலான பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News September 8, 2025

தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் வங்கியில் சூப்பர் வேலை..!

image

கனரா வங்கியில் காலியாக உள்ள Sales & Marketing பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.22,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் அக்.10 வரை <>இங்கே கிளிக் செய்து <<>>ஆன்லைன் மூலம் கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாமல் வேலை பெற அரிய வாய்ப்பு. உடனே அப்ளை பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 8, 2025

கோவில்பட்டியில் 2 போலீசார் சஸ்பெண்ட்

image

கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவு எஸ்ஐ செல்வகுமாரும், அதே பிரிவில் காவலராக உள்ள இந்திரா காந்தியும் நெருங்கி பழகிய நிலையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி நடுரோட்டில் வைத்து சண்டையிட்டு கொண்டனர். இதனால் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து செல்வக்குமாரை நெல்லை சரக டிஐஜி சஸ்பெண்ட் செய்த நிலையில் தூத்துக்குடி எஸ்பி ஆல்பட் ஜான் இந்திரா காந்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!