News September 11, 2025
தூத்துக்குடி கீழே கிடந்த நகையை மீட்ட போலீசார்

நெல்லை மாவட்டம், தட்டார்மடம் அன்னாள் நகரை சேர்ந்த ஜெபஸ்டின் (33) என்பவர் நேற்று பிரண்டார்குளம் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது காரில் இருந்த கைப்பை தவறவிடப்பட்டது. இதனை தொடர்ந்து பணியில் இருந்த காவலர் மாணிக்கராஜ் என்பவர் அந்த பையை மீட்டு சாத்தான்குளம் டிஎஸ்பி இடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அதிலிருந்து 2 பவுன் தங்க நகை மற்றும் 110 கிராம் வெள்ளி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News September 11, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணை குழுவின் சார்பில் வரும் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தீர்க்கப்படாத வழக்குகளை தீர்க்கும் வகையில் சுமூக தீர்வு வழங்கப்படும் என மாவட்ட நீதிபதி வசந்தி தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
தூத்துக்குடி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா??

தூத்துக்குடி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.
News September 11, 2025
தூத்துக்குடி: சொந்தவீடு கட்ட போறீங்களா??

தூத்துக்குடி மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <