News November 5, 2025

தூத்துக்குடி: கல்லால் தாக்கி கொடூரக் கொலை

image

காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது (38) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் குலசேகரப்பட்டினம் தர்காவிற்கு சென்ற அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அவர் குலசேகரபட்டினம் தர்கா அருகே கல்லால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது சம்பந்தமாக குலசேகரப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 5, 2025

கோவில்பட்டி சுந்தர்ராஜப்பெருமாள் கோவில் திருக்கல்யாணம்

image

கோவில்பட்டி ஸ்ரீ தேவி – நீலாதேவி உடனுறை அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. திருக்கல்யாண விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அலங்காரமும், அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி நீலாதேவி உடனுறை சுந்தரராஜப்பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News November 5, 2025

தூத்துக்குடி: அத்துமீற முயன்றவருக்கு தர்ம அடி

image

தெய்வச் செயல்புரத்தைச் சேர்ந்த முருகன் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இவர் அப்பகுதியில் விவசாய கூலி வேலை செய்துவிட்டு வந்த பெண்னிடம் அத்துமீற முயன்றுள்ளார். அப்போது அப்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் முருகனுக்கு தர்ம அடி கொடுத்த நிலையில் இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2025

தூத்துக்குடி: அரிவாளுடன் ரகலையில் ஈடுபட்டவர் கைது

image

தூத்துக்குடி தெர்மல் நகர் போலீசார் தெர்மல் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கையில் நீண்ட அருவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த அறிவாளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!