News November 20, 2024
தூத்துக்குடி கலெக்டர் அறிக்கை வெளியீடு

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (நவ22) காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் வழங்கி பயன் பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
தூத்துக்குடி கீழே கிடந்த நகையை மீட்ட போலீசார்

நெல்லை மாவட்டம், தட்டார்மடம் அன்னாள் நகரை சேர்ந்த ஜெபஸ்டின் (33) என்பவர் நேற்று பிரண்டார்குளம் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது காரில் இருந்த கைப்பை தவறவிடப்பட்டது. இதனை தொடர்ந்து பணியில் இருந்த காவலர் மாணிக்கராஜ் என்பவர் அந்த பையை மீட்டு சாத்தான்குளம் டிஎஸ்பி இடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அதிலிருந்து 2 பவுன் தங்க நகை மற்றும் 110 கிராம் வெள்ளி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
News September 11, 2025
தூத்துக்குடி மாவட்டத்தின் இன்றைய SPL தகவல்!

தூத்துக்குடி மாவட்டம் 90.66 பரப்பளவு நீளம் கொண்ட நகரமாகும்.
1. தூத்துக்குடி – 51
2.கிராமப்புறம் – 4
3. மீலாவின் பஞ்சாயத்து – 5
4. முத்தையாபுரம் பஞ்சாயத்து – 5
5.அத்திமரப்பட்டி பஞ்சாயத்து – 5
6.சங்கரபேரி பஞ்சாயத்து – 5 என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 73 வார்டுகள் உள்ளது. உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…
News September 11, 2025
தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் குறைத்தீர் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து திருப்தி பெறாத புகார் தரர்கள் 69 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானிடம் நேரடியாக மனு கொடுத்து பயன்பட்டனர். அதைத்தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.