News December 5, 2025

தூத்துக்குடி: கம்பால் அடித்து கொலை.. 2 பேருக்கு ஆயுள்

image

ஆறுமுகநேரி அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசூசை ராஜ். இவரை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிலிவிங்ஸ்டன், அன்றோ ஆகியோர் முன் விரோதம் காரணமாக கம்பில் அடித்து கொலை செய்தனர். இது பற்றி திருச்செந்தூர் போலீசார் இருவர் மீதும் தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அன்றோ, அந்தோணி லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Similar News

News April 8, 2026

தூத்துக்குடியில் 694-வது நாளாக தொடரும் போராட்டம்..

image

தூத்துக்குடி அடுத்த பொட்டலூரணியை சுற்றியுள்ள 3 கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி, கிராம மக்கள் நேற்று 694 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர். பல வழிகளில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், சுவாசிக்கவே போராடும் நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது பொய் வழக்கு பதிந்துள்ளதாகவும், இதுவரை ஆலையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

News April 8, 2026

தூத்துக்குடி: தாறுமாறாக ஓடிய பஸ்; டிரைவர் உயிரிழப்பு..!

image

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் இருந்து தூத்துக்குடி வழியாக பசுவந்தனை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நெல்லை – தூத்துக்குடி பைபாஸ் சாலையில் மறவன்மடம் அருகே பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்கம்பம் மீது மோதி நிற்காமல் சென்று, பனைமரம் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் மணிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 8, 2026

தூத்துக்குடி: தாறுமாறாக ஓடிய பஸ்; டிரைவர் உயிரிழப்பு..!

image

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் இருந்து தூத்துக்குடி வழியாக பசுவந்தனை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நெல்லை – தூத்துக்குடி பைபாஸ் சாலையில் மறவன்மடம் அருகே பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்கம்பம் மீது மோதி நிற்காமல் சென்று, பனைமரம் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் மணிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!