News January 1, 2026
தூத்துக்குடி: இளம்பெண் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை?

கீழவைப்பார் கிராமத்தைச்சேர்ந்த மெரின் என்பவரின் மனைவி இன்ஃபன்ட் தீபிகா (34). இன்ஃபன்ட் தீபிகாவிற்கு சில வருடங்களாக சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இதனால் மனவிரக்தியில் இருந்து வந்த இன்பன்ட் தீபிகா தனது கணவர் மெரினுக்கு தனது குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து குளத்தூர் போலீசார் விசாரணை.
Similar News
News February 17, 2026
தூத்துக்குடி: கடலில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த மீனவரான ஜான்சன், நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு ஒன்றில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் கடலில் குதித்து அவரை மீட்க முயன்றனர். ஜான்சன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 17, 2026
தூத்துக்குடிக்கு கனமழை எச்சரிக்கை – IMD

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் சூழலில், இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகையில் பிப்.21 ம் தேதி கனமழை பெய்ய கூடும். மறுநாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. SHARE IT..
News February 16, 2026
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


