News February 3, 2026
தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு ரோந்து காவல் அதிகாரியாக குற்ற அவனை காப்பக டி.எஸ்.பி ராமச்சந்திரன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள அதிகாரிகள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அவசர தேவைக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்படுகிறது.
Similar News
News February 8, 2026
தூத்துக்குடி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தூத்துக்குடி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE
News February 8, 2026
தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 19 ஆண்கள், 3 பெண்கள், 5 மீனவ இளைஞர்கள் என மொத்தம் 27 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 45 வயது உடையவர்கள் வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தூத்துக்குடியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது
News February 8, 2026
தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை

தூத்துக்குடியில் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜராகாத 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 17 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 குற்றவாளிகள் மீது பிணைப்பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.


