News April 15, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து காவலர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
தூத்துக்குடி: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை 0461-2325606 அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.
News August 14, 2025
தூத்துக்குடி: ரூபாய் 1 லட்சம் வேணுமா..?

தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழாவையொட்டி, ஆக 14 முதல் 21 வரை புகைப்படப் போட்டி நடைபெறும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார். மாவட்ட கலாச்சாரம், பாரம்பரியம், இயற்கை, தொழிலாளர் வாழ்க்கை தலைப்புகளில் 5 சொந்தப் படங்களை, AI, கிராபிக்ஸ் இல்லாமல், 5 MB-க்குள் thoothukudi.nic.in தளத்தில் பதிவேற்றலாம். முதல் பரிசு ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.50,000, 10 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.5,000 வழங்கப்படும்.
News August 14, 2025
தூத்துக்குடியில் புகைப்படப் போட்டி அறிவிப்பு

தூத்துக்குடி 6வது புத்தகத் திருவிழா ஆக.22 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, புகைப்படப் போட்டி ஆக. 14 – 21 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட கலாச்சாரம், பாரம்பரியம், இயற்கை, தொழிலாளர் வாழ்க்கை போன்ற தலைப்புகளில் அதிகபட்சம் 5 சொந்தப் படங்களை, AI/கிராபிக்ஸ் இல்லாமல், 5 MBக்கு குறைவாக, thoothukudi.nic.in மூலம் பதிவேற்றலாம்.