News March 7, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Similar News
News March 7, 2025
அனிதா ராதாகிருஷ்ணனின் நாளைய நிகழ்ச்சிகள்

மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச்.07) பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணியளவில் திருச்செந்தூர் தெய்வா திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு, 11 மணிக்கு நா.முத்தையாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை திறப்பு, 11.30 க்கு உடன்குடியில் சமுதாய வளைகாப்பிலும் பங்கேற்கிறார்.
News March 7, 2025
பரபரப்பான சூழ்நிலையில் காவல்துறை செய்தி வெளியீடு

எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது, கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. முனீஸ்வரன் என்பவர் முன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து 5¾ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 யும், மகேஷ் கண்ணனிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகள், ரூ.15,000 மீட்கப்பட்டுள்ளது.
News March 6, 2025
தூத்துக்குடி மக்களே பறவை கணக்கெடுப்பில் பங்கு பெறுங்கள்

வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பும், அதன்பிறகு வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பும் நடக்கிறது. தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில் இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் வனச்சரக அலுவலரை 9597477906 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.