News April 29, 2024
தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தாளமுத்து நகர் போலீசார் நேற்று மாதா நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 5, 2026
திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை செய்தி

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் வளாகத்திற்குள் வந்தால் மட்டுமே பன்னீர் இலை, விபூதி பிரசாதம் உள்ளிட்ட பல்வேறு பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் முருகன் கோயில் பெயரில் போலி சமூக தளத்தில் சிலர் கோவில் பிரசாதத்தை தங்களுக்கு கொரியரில் அனுப்பி வைப்பதாக கூறி பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர். எனவே, இவற்றை யாரும் நம்ப வேண்டாம் என கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News January 4, 2026
தூத்துக்குடி: இனி பட்டா பெயர் மாற்றம் ஈஸி

தூத்துக்குடி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
News January 4, 2026
தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்யும் அதிகாரி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த கோரி சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து நீதிமன்றம் உத்தரவை சரிவர செய்யாததாக கூறி மேல் முறையீடு வழக்கு மீண்டும் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் இது தொடர்பாக ஆய்வு நடத்த ராஜஸ்தானை சேர்ந்த நிபுணர் ராஜேந்திரசிங் என்பவர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


