News March 2, 2025
தூத்துக்குடியில் ‘8’ என சொல்லாத ஊர் இருந்தது! தெரியுமா?

சுதந்திரத்திற்கு முன்பு திருநெல்வேலி சீமையில் மிகப்பெரியபாளையம் எட்டையாபுரம் ஆகும். இதனை ஆண்ட மன்னர்கள் எட்டப்பர்கள் என்று அழைக்கப்பட்டனர். அப்போது, மக்கள் அரசு களஞ்சியத்தில் நெல்லை அளந்து கொடுக்கும்போது லாபம் 1,2,3,4,5,6,7 என்று அளக்கும் அவர்கள் 8 க்கு பதில் ராஜா என்பார்களால். எட்டு என்றால் (எட்டப்பர்) ராஜாவை குறிக்கும் என்பதால் எட்டாம் நம்பரை அப்போது சொல்வதில்லையாம். *புது தகவல்னா ஷேர் பண்ணுங்க
Similar News
News March 3, 2025
TUTICORIN – பெயர் மாற்றப்படுமா?

தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஆங்கில உச்சரிப்பு கொண்ட ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்புக்கு ஏற்றபடி மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியின் ஆங்கில பெயர் ‘TUTICORIN’ என்பது ‘THOOTHUKUDI-‘ஆக பெயர் மாற்றப்பட்டுள்ளது. எனினும் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தில் பழைய பெயர்தான் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
News March 3, 2025
கனிமொழி எம்பி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று (3)பரிவள்ளிக்கோட்டை பஞ்சாயத்து கள்ளத்தி கிணறில் காலை 10:30 மணிக்கு 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயநல கூட்டத்தை திறந்து வைக்கிறார். அதன் பின் அங்குள்ள பொது விநியோக கூடம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள உணவு கூடம் போன்றவைகளையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.
News March 3, 2025
தூத்துக்குடி: பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் மரணம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை வேலாயுதபுரத்தைச் சேர்ந்த பல்க் உரிமையாளர், தொழிலதிபர் மற்றும் பாஜகவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் P. போஸ் (02.03.2025) நேற்று இயற்கை எய்தினார். பாஜக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் என கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.