News March 5, 2025

தூத்துக்குடியில் 19 ஆயிரம் பேர் +1 தேர்வு எழுதுகின்றனர்!

image

தமிழகத்தில் கடந்த 3ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று(மார்ச் 5) பிளஸ் 1 தேர்வு துவங்கியுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 90 மையங்களில், 19,760 மாணவர்கள் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகளை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

Similar News

News April 21, 2025

தூத்துக்குடியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

image

தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதி பிரிவில் 10 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிப்ளமோ படித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 21, 2025

பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு

image

தூத்துக்குடி வி. இ ரோட்டை சேர்ந்தவர் ஜாக்சன் (61). நேற்று முன்தினம் இவர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயம் சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 14 பவுன் நகை திருடப்பட்டதைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 21, 2025

தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!