News January 7, 2026

தூத்துக்குடியில் வீடு புகுந்து நகை திருட்டு

image

தூத்துக்குடி கந்தசாமி புரத்தைச் சேர்ந்த சரவணகுமார் மனைவி முத்துலட்சுமி அங்குள்ள மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை 4 மணிக்கு முத்துலட்சுமி வீட்டில் சாவி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின் இரவு 7 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பீரோவில் இருந்த 4.5 பவுன் நகை மற்றும் ரூ.4500 பணம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து தூத்துக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 13, 2026

தூத்துக்குடி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 13, 2026

தூத்துக்குடி: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

தூத்துக்குடி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க

News February 13, 2026

JUST IN: தூத்துக்குடி எஸ்.பி திடீர் டிரான்ஸ்பர்!

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்து வரும் சிலம்பரசன் மாவட்டத்தில் பொறுப்பேற்று ஒரு சில மாதங்களே ஆனது. இந்த நிலையில் அவர் திடீரென தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை சட்டம் ஒழுங்கு எஸ்.பி-யாக பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும், திருநெல்வேலி மேற்கு கமிஷனராக பணிபுரிந்து வரும் மதன் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்க உள்ளார். இந்த திடீர் மாற்றம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

error: Content is protected !!