News September 15, 2025
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வெள்ளபாண்டியன் என்பவரின் மனைவி செல்லத்தாய் என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த நபர் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
தூத்துக்குடி: தனியார் பேருந்தில் புகை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே முக்காணி பகுதியில் நேற்று சென்னையில் இருந்து தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த பேருந்து முக்காணி அருகே வந்த போது பேருந்தின் உள்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனைத் தொடர்ந்து அதிலிருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News September 15, 2025
தூத்துக்குடி: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இங்க<
News September 15, 2025
தூத்துக்குடியில் குழந்தை திருமணம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் இடையே குழந்தை திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த திருமண குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.