News October 1, 2024

தூத்துக்குடியில் பூட்டிய வீட்டின் கதவில் ஒட்டை போட்டு திருட்டு

image

தூத்துக்குடி பிஅன்ட் டி காலனியை சேர்ந்தவர் செல்வகணபதி வணிகவரித்துறை ஊழியர் கடந்த 27ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு விஷேத்திற்கு குடும்பத்துடன் கேரளா சென்றார.நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வீட்டின் பின்பக்க கதவில் ஒட்டை போட்டு பீரோவில் இருந்த 3 பவுன் ரூ.12,500 திருடியுள்ளனர். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை செய்கின்றனர்

Similar News

News September 13, 2025

தூத்துக்குடி: முன்னாள் எம்எல்ஏ மகனுக்கு சிறை தண்டனை

image

சாத்தான்குளத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நீலமேகவர்ணம் என்பவரின் மகன் கதிரவன் ஆதித்தன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது நண்பரான முத்துசெல்வன் (45) என்பவரிடம் 7 பவுன் நகையை வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து விசாரணை நடத்திய சாத்தான்குளம் நீதிமன்றம் கதிரவன் ஆதித்தனுக்கு 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.

News September 13, 2025

தூத்துக்குடி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

image

தூத்துக்குடி மக்களே செப்.13ம் தேதி முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 13, 2025

மில்லர்புரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு – மேயர் ஆய்வு

image

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மில்லர்புரம் பகுதியில் குடிநீர் குழாய் செல்லும் பாதையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், சுந்தரவேல்புரம் பகுதியில் பூங்கா அமைத்து தருமாறும் வந்த மாநகர மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து அதனை மேயர் ஜெகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் உடனிருந்தார்.

error: Content is protected !!