News December 6, 2024
தூத்துக்குடியில் குடிநீருடன் கழிவு நீர்; சிபிஎம் கண்டனம்

தூத்துக்குடி மாநகராட்சி கணேசன் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக சிபிஎம் சார்பில் மாநகராட்சியில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் குடிநீரில் கழிவுநீர் கலப்பது சரி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் குடிநீருடன் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகின்றது. இதற்கு சிபிஎம் நகரச் செயலாளர் முத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 7, 2025
தூத்துக்குடி: சான்றிதழ் தொலைந்து விட்டதா.. இனி NO கவலை..!

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.
News September 7, 2025
பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மாற்றம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக பரமகுரு என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் பல்வேறு காரணங்களினால் அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அந்த பொறுப்பிற்கு ஏரல் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் என்பவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இதற்கான ஆணை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் வங்கியில் சூப்பர் வேலை..!

கனரா வங்கியில் காலியாக உள்ள Sales & Marketing பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.22,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 05.09.2025 முதல் 06.10.2025 ம் தேதிக்குள், இந்த <