News April 29, 2025

தூத்துக்குடி:மீன் வலையில் சிக்கி தொழிலாளி பலி

image

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை இந்திரபிரஸ்தம் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி வெற்றிவேல்முருகன்(45). இவர் கழுகுமலை பகுதியில் குளங்களில் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார்.கடந்த 27-ம் தேதி மாலை குறவன்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றார். மதுபோதையில் குளத்தில் இறங்கிய அவர், மீனுக்கு விரிக்கப்பட்ட வலைக்குள் சிக்கி மூழ்கி உயிரிழந்தார். கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Similar News

News April 29, 2025

தூத்துக்குடி நீதிபதிகள் பணியிட மாற்றம்

image

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்ட நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாதவ ராமானுஜம் மதுரை மாவட்டம் மூன்றாவது கூடுதல் நீதிபதியாகவும், தூத்துக்குடி குடும்ப நல நீதிமன்ற நீதிபதி வி சுரேஷ் ஈரோடு மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

News April 29, 2025

தூத்துக்குடி:உங்கள் போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

▶️துணை காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் – 04639-245100

▶️துணை காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீவைகுண்டம் – 04630-255236

▶️துணை காவல் கண்காணிப்பாளர், மணியாச்சி – 0461-2273252

▶️துணை காவல் கண்காணிப்பாளர், கோவில்பட்டி – 04632-220020

▶️துணை காவல் கண்காணிப்பாளர், விளாத்திகுளம் – 04638-233498

▶️துணை காவல் கண்காணிப்பாளர், சாத்தான்குளம் -04639-266499

News April 29, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!