News April 1, 2025

தூத்துக்குடி:பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் விநாயகர் கோயில்

image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. விநாயகருக்கு தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கிய கோயில்களில் ஒன்று, இக்கோயிலில் திருவிழாவும் சிறப்பாக நடக்கும். வழக்குகளில் இழுபறி, அடிக்கடி உடல்நலக் குறைவு, திருமணத் தடை, படிப்பில் குறைபாடு, பணப்பிரச்சனைகள் இருந்தால், இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் காரியம் சிறப்பாக நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*

Similar News

News April 3, 2025

தூத்துக்குடி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News April 2, 2025

தூத்துக்குடி பொதுமக்களுக்கு எஸ்பி முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் கடந்த சில தினங்களாக பிரைம் இந்தியா டவர் என்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் என கூறிய மர்ம நபர்கள் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் தேவை என கூறி ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட முயன்று வருகின்றனர். எனவே இது போன்ற பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 2, 2025

தூத்துக்குடி: திருமணத்தடை நீக்கும் கோயில்

image

ஸ்ரீவைகுண்டம் அருகே அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி திருவிழா, பௌர்ணமி பூஜை, தமிழ் வருடப்பிறப்பு பூஜை சிறப்பாக நடக்கும். மூலஸ்தானத்தில் மயிலேறும் பெருமான் சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார். பக்தர்கள் பால்குடம் எடுத்தும் ,மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு வேண்டினால் திருமணத்தடை நீங்குவதாக பக்தர்கள் கருதுகின்றனர். *ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!