News April 15, 2024
தூங்கிக் கொண்டிருந்த மகள் மாயம், தாயார் புகார்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடுவதியம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், மகள் திருப்பாவை (16). வழக்கம் போல் இரவில் குடும்பத்தினர் தூங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது திருப்பாவை மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் திருப்பாவை தாயார் சுதா புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
JUST IN: கரூரில் பிரபல நடிகை மீது வழக்கு!

கரூரைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளரிடம் 10 லட்சம் ரூபாய் பணம், பிஎம்டபிள்யூ கார், ஐந்து சவரன் நகை ஆகியவற்றை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ராணி அவரது கணவர் பாலாஜி, பாலாஜியின் நண்பர் உள்ளிட்ட மூன்று பேர் மீது கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 29, 2025
BREAKING: அரவக்குறிச்சியில் அதிரடி காட்டிய செங்கோட்டையன்!

தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில், அரவக்குறிச்சி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரியமுல் ஆசியா இன்று அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார்.செங்கோட்டையன் கட்சியின் இணைந்த நாள் முதலே அதிமுகவில் உள்ள பலர் தவெக இனைவார்கள் என தெரிவித்தார். அதன்படி நேற்று அதிமுக ஓமலூர் EX எம்எல்ஏ இணைந்தநிலையில் தற்போது மரியமுல் ஆசியா இணைந்துள்ளார்.
News December 29, 2025
கரூர் மாவட்டத்தில் 4 பேர் அதிரடி கைது!

கரூர், பசுபதிபாளையம், க. பரமத்தி, வாங்கல் ஆகிய காவல்நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற விக்கி (36), மாரியம்மாள் (67), அன்பழகன் (48), மலர்கொடி (55) ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.


