News March 23, 2025
தூக்கு மாட்டி வாலிபர் தற்கொலை

சித்தோடு, சூரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் வயது 36 தொழிலாளி, இவர் நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் சென்று, இறந்து போன பரமேஸ்வரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதனால் இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 16, 2025
ஈரோடு: தெருநாய்கள் தொல்லையா? உடனே CALL

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை இருந்தால், பொதுமக்கள் புகார் அளிக்க, 0424-2220101 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News August 16, 2025
ஈரோட்டில் இலவச Tally பயிற்சி!

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <
News August 16, 2025
புளியம்பட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

புஞ்சைப் புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி, சுப்பிரமணியர் கோவிலில், கால பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலபைரவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.