News May 5, 2024

துவங்கியது நீட் நுழைவு தேர்வு..!

image

மதுரை மாவட்டத்தில் நீட் நுழைவு தேர்வு 13 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 9312 மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் மாணவ மாணவியர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்வு எழுத வருகை புரிந்துள்ளனர். மாணவ மாணவியர் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு 2 மணி முதல் துவங்கி மாலை 5.20 மணியுடன் நிறைவு பெருகிறது.

Similar News

News September 13, 2025

மதுரையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி கொள்ளை

image

வாடிப்பட்டி பகுதியில் அடுத்தடுத்துள்ள 4 கோயில்களில் ஆடிப்பெருக்கு அன்று இரவு உண்டியலை உடைத்து திருடிய சமயநல்லுார் ரூபன்31, சேகர் 22, வடகாடுபட்டி தமிழழகன்22 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். 4 கிராம் தங்கம், ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டது. விக்கிரமங்கலம் பகுதியில் மதுஅருந்தும் இடத்தில் பழகி நண்பர்களான இவர்கள், விசேஷ நாட்களை நோட்டமிட்டு கூகுள் மேப்பில் கோவில்களை கண்டறிந்து திருடியது அம்பலமானது.

News September 13, 2025

ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்ற மூவர் மதுரையில் சரண்

image

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளருமான ம.க.ஸ்டாலினை வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 3 பேர் மதுரை மதுரை மாவட்ட 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். சரணடைந்த விஜய் 27, ஆகாஷ் 30, மகாலிங்கம் 26 ஆகிய 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

News September 13, 2025

மதுரை:ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️மதுரை மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!