News May 5, 2024
துவங்கியது நீட் நுழைவு தேர்வு..!

மதுரை மாவட்டத்தில் நீட் நுழைவு தேர்வு 13 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 9312 மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் மாணவ மாணவியர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்வு எழுத வருகை புரிந்துள்ளனர். மாணவ மாணவியர் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு 2 மணி முதல் துவங்கி மாலை 5.20 மணியுடன் நிறைவு பெருகிறது.
Similar News
News December 11, 2025
BREAKING: மதுரையில் 4 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் வாக்காளர்கள் இறந்தவர்கள், இரட்டை வாக்கு, வீடு மாற்றம், SIR படிவங்களை சமர்ப்பிக்காதது போன்ற காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். இதில் ஒன்றரை இலட்சம் பேர் உயிரிழந்தது காரணமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News December 11, 2025
தமிழக ஆளுநர் நாளை மதுரை வருகை

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தின் 57வது பட்டமளிப்பு விழா நாளை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரவி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்க உள்ளார். இதற்கென ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
News December 11, 2025
மதுரையில் EB கட்டணம் அதிகமா வருதா?

மதுரை மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <


