News March 24, 2025

துளசியாபட்டினம் அவ்வையாரின் சிறப்பு

image

வேதாரண்யம் கொல்லன் திடல் பகுதியில் அவ்வையார் தங்கி இருந்த போது அப்பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அவரை வேறு இடத்திற்கு செல்ல கொல்லன் கூறிய போது, வல்லனும் வெள்ளையாகி வளவனும் பேருராகி, கொல்லன் திடல் தவிர கொள்ளா பெருங்கடலை என அவர் பாடினார். அந்தஊரை சேர்ந்த வெள்ளம் வளவனாற்றில் வடிந்ததா கூறப்படுகிறது. சிறப்பு பெற்ற அவ்வைக்கு தனி சன்னதி இருப்பது தமிழகத்தில் துளசியாபட்டினத்தில் மட்டுமே என்பது தனி சிறப்பு.

Similar News

News August 16, 2025

50% மானியம்: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் கீழையூர் மற்றும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஏழை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50% மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயனடைய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்

image

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று 79வது சுதந்திர தின விழா நடைப்பெற்றது. இவ்விழாவில், நாகை மாவட்டத்தில் தீயணைப்பு துறை வேளாண்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 172 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பவனந்தி, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News August 15, 2025

நாகை: கடன் தொல்லை நீங்க இந்த கோயில் போங்க!

image

நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இரத்தினகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள குளத்தில் விரதமிருந்து நீராடி, மூலவர்களான இரத்தினகிரீசுவர் மற்றும் மாணிக்கவண்ணாரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி, நினைத்த காரியம் நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!