News March 30, 2025

துறையூர் அருகே வலிப்பு நோயால் கிணற்றில் விழுந்தவர் பலி

image

துறையூர் அருகே பொன்னுசங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(38). இவர் இன்று காலை துறையூர் பெரிய ஏரி பகுதியில் விவசாய வேலைக்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணறு ஒன்றில் சரவணன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Similar News

News February 6, 2026

திருச்சி: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

திருச்சி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 6, 2026

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

image

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக மண்ணச்சநல்லூர், தென்னூர், கோணலை, அய்யம்பாளையம், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கண்டார் கோட்டை, மேலூர், காவல்காரன்பட்டி, சுக்காம்பட்டி, கருமலை, பண்ணங்கொம்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News February 6, 2026

திருச்சி: உதவித்தொகைப் பெற 4,431 பேர் தேர்வு

image

திருச்சி மாவட்ட கலக்டெர் செய்தி வெளிட்டுள்ளார். அதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை உட்பட பல்வேறு மாதாந்திர உதவித்தொகைகள் பெறுவதற்கு, திருச்சி மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் மூலம் புதிதாக 4,431 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!