News October 15, 2025

துயர சம்பவம்; மீண்டும் கரூர் செல்லும் விஜய்?

image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்கான பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News October 15, 2025

கரூர்: பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி கூலி தொழிலாளி பலி

image

க.பரமத்தி அருகே மேலப்பாளையம் பகுதியில் சேகர் என்பவர் மது அருந்திவிட்டு அவரது மனைவியுடன் வாய் தகராறு ஏற்பட்டதில் நேற்று மனவிரக்தியில் இருந்த சேகர், பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News October 15, 2025

BREAKING: கரூர் சம்பவம்: பேரவையில் CM விளக்கம்!

image

கரூர் துயர சம்பவம் குறித்து இன்று (அக்.15) சட்டமன்றப் பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “த.வெ.க. பிரசாரத்திற்கு வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஏற்பாட்டாளர்கள் போதிய குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. 41 உயிர்களைப் பலி கொண்ட இத்துயர சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

News October 15, 2025

கரூர்: டூவீலர் மெக்கானிக் நெஞ்சு வலி காரணமாக பலி

image

கரூர் அருகே வாழ்வார்மங்கலம் பகுதியில் ராஜலிங்கம் (35) என்பவர் தனது டூ வீலர் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, திடீரென நெஞ்சுவலியின் காரணமாக மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!