News May 3, 2024

துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த 4 பேர் கைது

image

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை கிருஷ்ணா நகை கடையில் ஏப்.16ஆம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட 2.5 கிலோ தங்கத்தில் 700 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 8 குற்றவாளிகளில் 4 பேர் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை தேடி வருவதாக ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 26, 2025

திருவள்ளூர்: வேலை தேடுவோர் கவனத்திற்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வரும் 30-ஆம் தேதி மாவட்ட நிர்வாகம், மாவட்டத் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

பள்ளி சமையல் அறையில் தீ விபத்து

image

கும்மிடிப்பூண்டி அருகே காயலார்மேடு அரசு தொடக்கப்பள்ளி சமையல் அறையில் சமையலர் அபிராமி நேற்று மதிய உணவு சமைக்கும் போது எரிவாயு கசிவால் தீப்பற்றியது. அருகில் இருப்பவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர். இதில் யாருக்கும் காயமில்லாத நிலையில், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News August 26, 2025

திருவள்ளூர்: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வரும் 30-ஆம் தேதி மாவட்ட நிர்வாகமும், மாவட்டத் தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!