News October 15, 2025
துணை முதல்வர் நாளை தொடங்கி வைக்கும் முக்கிய நிகழ்ச்சி

விஜயா பதியில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் கட்டுமானப் பணிகளை நாளை (அக்.16) காலை 11:00 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். அதனைத்தொடர்ந்து ராதாபுரம் ஆனந்தம் மஹாலில் நடைபெறும் காணொலி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலைமையில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
Similar News
News October 16, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.15] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News October 15, 2025
திருநெல்வேலியில் தீபாவளியன்று மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலியில் அக்.17,18,20ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 15, 2025
நெல்லை: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.’