News January 30, 2026
துணை முதல்வராகிறாரா அஜித் பவாரின் மனைவி?

அஜித்பவார் விமான விபத்தில் இறந்ததை தொடர்ந்து, அவர் வகித்த DCM பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அஜித் பவாரின் மனைவியும், MP-யுமான சுனேத்ரா பவார், DCM-ஆக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களின் கோரிக்கையை சுனேத்ரா ஏற்றுக் கொண்டதாகவும், மறைந்த அஜித் பவாரின் பாராமதி தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News February 6, 2026
ராணிப்பேட்டையில் நாளங்காடி திறப்பு

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.11.52 கோடியில் கட்டப்பட்ட நாளங்காடியை நேற்று (பிப்.5) காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வாரச்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள இந்த நாளங்காடியில் சில்லறை, மொத்த வியாபார கடைகள், குளிர்சாதன கிடங்கு, வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன.
News February 6, 2026
தேமுதிக கூட்டணி முடிவை தாமதிக்க இதுதான் காரணமா?

கூட்டணி நிலைப்பாட்டில் காங்கிரஸின் இரட்டை மனநிலையே தேமுதிக கூட்டணி முடிவை அறிவிக்காததற்கு காரணம் என புதிய தகவல் கசிந்துள்ளது. திமுக கூட்டணியில் இருக்கிறோம் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்தாலும், தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால், காங்., TVK பக்கம் சென்றால், தேமுதிகவும் அங்கு செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
News February 6, 2026
பாஸ்வேர்டுகளை AutoFill செய்கிறீர்களா?

உங்கள் போனில் பேஸ்புக், எக்ஸ் போன்றவற்றில் உள்நுழையும்போது பாஸ்வோர்டை AutoFill செய்பவரா? நீங்கள் பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள். IIIT ஹைதராபாத்தின் ஆராய்ச்சியில், இப்படி AutoFill செய்வது செக்யூரிட்டி வேலையை குறைக்கிறதாம். இதனால், உங்களின் போன் சைபர் கிரிமினல்கள் ஈசியாக ஹேக் செய்யப்பட்டு விடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. எனவே, இனி உங்களின் அனைத்து பாஸ்வோர்டுகளையும் டைப் செய்யுங்கள். SHARE IT.


