News August 31, 2025
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவியாரும், சேலம் கிழக்கு மாவட்ட தி்.மு.க. இளைஞரணி அமைப்பாளரும் வீரபாண்டி பிரபுவின் தாயாருமான லீலா ஆறுமுகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (ஆக.31) உயிரிழந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Similar News
News September 3, 2025
சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டி

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சென்னை சென்ட்ரல்-ஆழப்புலா தினசரி எக்ஸ்பிரஸ்(22639), ஆழப்புலா- சென்னை சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ்(22640), சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் தினசரி எக்ஸ்பிரஸ்(12695), திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ்(12696),கோவை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்(16618/16617) ஆகிய ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள்!
News September 3, 2025
விரைவில் 69 ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் படிக்கத் தெரியாத 1.10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இவர்களில் முதற்கட்டமாக 70,000 பேருக்கு, 1,921 தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை அனைவருக்கும் கல்வி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என கல்வியாளர்கள் கருத்து!
News September 3, 2025
மிலாது நபி: சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள்!

மிலாது நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (செப்.04) முதல் செப்.08- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், செப்.07- ல் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு செப்.07, 08- ல் சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.