News March 20, 2025

துணை மின் நிலையங்கள் அமைத்து வருகிறோம்: அமைச்சர்

image

“திருவள்ளூர் மாவட்டத்தில் 31 துணை மின் நிலையங்கள் அமைக்க இந்த ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுசெய்ய, ஆய்வு செய்து தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைத்து வருகிறோம்” என கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

Similar News

News March 21, 2025

இளைஞர் படுகொலை வழக்கில் 6 பேரிடம் விசாரணை 

image

திருவாலங்காடு அருகே சின்னம்மா பேட்டை லோகேஷ் (24) இவர் கஞ்சா போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் லோகேஷை அடையாளம் தெரியாத நபர்கள் நார்த்தவாடா செல்லும் சாலையில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <>விண்ணப்பிக்கும்<<>> லிங்க்

News March 21, 2025

திருத்தணி அருகே இளைஞர் வெட்டிக்கொலை

image

திருவள்ளூர் – திருத்தணி, நார்த்தவாடா பகுதியில் இன்று (மார்.21) காலை லோகேஷ் (19) என்ற இளைஞரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய கும்பல் குறித்து திருவாலங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!