News March 27, 2025

துணிச்சலாக பணியாற்றிய காவலருக்கு பாராட்டு 

image

வேட்டவலம் அடுத்த ஆவூரில் நேற்று நள்ளிரவு அடகுகடையில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்ற போது போலீசார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டும் திருட்டை தடுத்து நிறுத்தினார். இந்நிலையில், சிறப்பாக பணியாற்றிய அவருக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். நாமும் இவரை பாராட்டுவோமே. ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 6, 2025

தி.மலை மாவட்டத்தில் 439 காலி பணியிடங்கள் அறிவிப்பு 

image

தி.மலை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 131 அங்கன்வாடி பணியாளர், 54 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 254 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 439 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th பாஸ் போதும். ஆர்வமுள்ளவர்கள், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் 23.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க*.

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

News April 6, 2025

வேலைவாய்ப்பற்ற தி.மலை இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை திட்டத்திற்காக மே 31க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தர்பகராஜ் தெரிவித்தார். பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டு பதிவு செய்தவர்களுக்கு தகுதி உள்ளது. வயது மற்றும் வருமான வரம்பு உண்டு. tnvelaivaaippu.gov.in-இல் ஆன்லைனில் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!