News November 16, 2025
தீவிரமடைந்த புயல் சின்னம்.. கனமழை பொளந்து கட்டும்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
ஆஸ்கருக்குள் நுழைந்த தமிழ் படம்

ஆஸ்கர் 2026 திரையிடலுக்கு, ‘கெவி’ படம் தேர்வாகியுள்ளது. அடிப்படை வசதிகளற்ற மலைவாழ் கிராமத்தினரின் வாழ்க்கையில் உள்ள அரசியல், ஆதிக்கம், வாழ்வாதார போராட்டம் ஆகியவற்றை மிகவும் உணர்வுப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியது. இப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. <<18297184>>பா.ரஞ்சித்<<>> தயாரித்த ‘தலித் சுப்பையா: வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ ஆவணப்படமும் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
News November 16, 2025
திமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திமுக கூட்டணியில் தமிழ் புலிகள் கட்சி இணைவதாக அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை பாதுகாக்க திமுகவுடன் கைகோர்ப்பதாகவும், 2026 தேர்தலில் 5 தொகுதிகளுக்கு மேல் கேட்போம் எனவும் கூறியுள்ளார். மேலும், தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஜன.3-ம் தேதி ஈரோட்டில் நடக்கவிருக்கும் ‘வெல்லும் தமிழ்நாடு’ மாநாட்டில் உதயநிதி பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
நீட் விலக்கு மசோதா: தமிழக அரசு SC-ல் மனு

2021-ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை, 2022-ல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பி வைத்தார். இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இதற்கு ஒப்புதல் வழங்க ஜனாதிபதி மறுத்தார். இந்நிலையில், நிராகரித்ததற்கான காரணம் தெரிவிக்காமல், சுமார் 1,400 நாள்களுக்கும் மேலாக ஜனாதிபதி ஒப்புதல் வழங்காமல் உள்ளதாக கூறி, இதற்கான ஒப்புதலை SC-யே வழங்க கோரி தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.


