News April 6, 2025

தீரா நோய் தீர்க்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்

image

தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர் 8 திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வமாக உருவாக்கினார். அதில் ஒருவர் தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். இங்குள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது. ஆகவே இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்வதில்லை, அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். அதற்குமாறாக 5 ஆண்டுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். இங்கு வழிபட்டால் அம்மை நோய் மற்றும் தீரா நோயும் தீரும் எனக்கூறப்படுகிறது.

Similar News

News April 8, 2025

உலகம் வியக்கும் தஞ்சாவூர் பொருட்கள் 

image

தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற 62 பொருட்களில், 10 பொருட்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும் அவை: 1. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை 2. தஞ்சாவூர் ஓவியம் 3. சுவாமிமலை வெங்கல சிலை 4. நாச்சியார்கோவில் விளக்கு 5. தஞ்சாவூர் வீணை 6. தஞ்சாவூர் கலைத்தட்டு 7. கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் 8. தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு 9. கும்பகோணம் வெற்றிலை 10. நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் ஆகியவை ஆகும். ஷேர் பண்ணுங்க

News April 8, 2025

தஞ்சை அருகே வேலை வாய்ப்பு

image

திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க

News April 8, 2025

தமிழில் பெயர் பலகை வைக்க கால அவகாசம் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க (மே.15) வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!