News March 20, 2025
தீராத வியாதிகளை தீர்க்கும் வைத்திய வீரராகவர்

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற வீரராகவர் கோவில் உள்ளது. மூலவரை, வைத்திய வீரராகவர், பிணி தீர்க்கும் வீரராகவர் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இங்கு 3 அம்மாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து வழிபட்டால், தீராத வியாதிகள், வயிற்றுவலி, காய்ச்சல் ஆகியவை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிகையாக உள்ளது. தவிர, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 21, 2025
ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்

திருத்தணியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியிடம், ஜோதிநகரை சேர்ந்த வெங்கடேசன் (26) , காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார், இதை நம்பிய அம்மாணவியை மூன்று நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து,நேற்று வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
News March 21, 2025
திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் தேதி மாற்றம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினம் 23.03.2025 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால் கிராம சபை கூட்டம் வரும் 29.03.2025 அன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இதில் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதான் தெரிவித்துள்ளார்.
News March 20, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள (20-03-2025) வியாழக்கிழமை அன்று இரவு ரோந்து போலீசார் விவரங்களை காவல் நிலையம் வாரியாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.