News September 6, 2025

தீபாவளி: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

தீபாவளிப் பண்டிகைக்கு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்ட நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு, தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் வழியாகச் செல்லும் செங்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களில், ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News September 7, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் சித்தலிங்கமடம் பகுதியில் இன்று (செப்.07) இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

விழுப்புரம்: PHONE தொலைந்தால் என்ன செய்யலாம்?

image

விழுப்புரம் மக்களே, உங்கள் செல்போன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடுபோனாலோ இனி கவலை வேண்டாம். மத்திய அரசின் சஞ்சார் சாத்தி என்ற <>இணையதளம் <<>>மூலம், உங்கள் செல்போன் தொலைந்தது குறித்துப் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும்போது, செல்போன் எண், IMEI எண் உள்ளிட்ட தகவல்களைப் பதிவிட வேண்டும். உங்கள் போன் தானாகவே அணைக்கப்பட்டுவிடும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

News September 6, 2025

விழுப்புரம்: அரசு அதிகார மையத்தில் வேலை!

image

விழுப்புரம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு துறையில் பட்டம், 3 ஆண்டு அனுபவம் அவசியம். மாத ஊதியம் ரூ.20,000. விண்ணப்பங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அல்லது இணையதளத்தில் கிடைக்கும். கடைசி தேதி 22.9.2025 மாலை 5.45 மணி. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!