News October 26, 2024
தீபாவளி பண்டிகையில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தென்மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் இன்று(அக்.26) தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு விற்பனை நடைபெற்றது. தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்யவும் வாங்கிச் செல்லவும் வந்திருந்தனர். இதுவரை ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
தூத்துக்குடியில் 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் மின்னல் கொடி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட உணவு நிறுவனங்கள், கடைகள் என மொத்தம் 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News January 27, 2026
தூத்துக்குடி: இனி கம்மி விலையில் புது பைக், கார், டிராக்டர்

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <
News January 27, 2026
தூத்துக்குடி: பேருந்து மோதியதில் ஒருவர் பலி

குரும்பூர் அருகே அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (49). திருச்செந்தூரில் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த இவர் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது குரும்பூர் மெயின் பஜாரில் சாலையை கடக்க முயன்ற போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை சென்ற தனியார் பஸ் இவர் மீது மோதியதில் பலத்த காயனடைந்த நிலையில் உயிரிழந்தார். இது குறித்து குரும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


