News February 7, 2026

தீபம் காட்டும் போது கற்பூரம் அணைந்தால் அபசகுணமா?

image

கற்பூர ஆரத்தி செய்த பிறகுதான், பூஜை பூர்த்தியானதாக கருதப்படுகிறது. கற்பூரம் எரியும்போது காற்றில் மறைந்துவிடுவதை போல, நமது ஆன்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற தத்துவத்தை கற்பூரம் விளக்குகிறது. தீபாராதனையின் போது தீபம் அணைந்துவிட்டால் அபசகுணம் என்று எண்ண வேண்டாம். அதே கற்பூரத்தை மீண்டும் ஏற்றாமல், உடனே வேறு கற்பூர துண்டுகளை வைத்து எரித்து தீபாராதனை காட்டலாம்.

Similar News

News February 10, 2026

இண்டியா கூட்டணியில் பிளவா? பார்லி.,யில் நடந்த சம்பவம்

image

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் இண்டியா கூட்டணியில் கருத்து பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இண்டியா கூட்டணி கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆதரிக்க TMC கட்சி மட்டும் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், மீதமுள்ள எதிர்க்கட்சி MP.க்கள் இத்தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளதால், இது விரைவில் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என்கின்றனர்.

News February 10, 2026

பாமகவின் குழப்பத்துக்கு திமுகவே காரணம்: அன்புமணி

image

ராமதாஸை சுற்றியுள்ள துரோகிகளில் முக்கியமானவர் ஜி.கே. மணி என ராயபுரத்தில் நடைபெற்ற இளைஞர் அணி கூட்டத்தில் அன்புமணி விமர்சித்துள்ளார். பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுகதான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். திரும்பிய திசையெல்லாம் திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடப்பதாகவும், இளைஞர்கள் புரட்சி செய்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் அவர் கூட்டத்தில் பேசியுள்ளார்.

News February 10, 2026

இந்த நேரத்தில் செல்போன் யூஸ் பண்ணாதீங்க!

image

நார்மலாகவே போன் அதிகமாக ஹீட்டாகும். அது, சம்மரில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். ஏன், போன் வெடிக்கும் அபாயமும் கூட ஏற்படலாம். அப்படி போன் அதிக ஹீட்டானால், நமக்கு ஒரு எச்சரிக்கை மெசெஜ் வரும். அது மாதிரியான நேரத்தில், என்ன வேலையாக இருந்தாலும், கொஞ்சம் நேரம் போனை யூஸ் பண்ணாதீங்க. போனை கொஞ்சம் நேரம் நிழலான இடத்தில் வைத்துவிட்டு, பிறகு யூஸ் பண்ணுங்க. SHARE IT.

error: Content is protected !!