News December 29, 2025
தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும்: ஜி.ஆர்.சுவாமிநாதன்

தனக்கும் தீபத்திற்கும் என்ன பொருத்தம் என்றே தெரியவில்லை என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார். நூல் வெளியீட்டு விழா ஒன்றில், குத்துவிளக்கு ஏற்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார். ஆனால், தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும் என நம்புவதாக பேசினார். தி.குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என அவர் உத்தரவிட்டதற்கு எதிராக வழக்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 22, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 588 ▶குறள்: ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். ▶பொருள்: ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியை, மற்றோரு உளவாளி கொண்டு வந்த செய்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா இல்லையா என்ற முடிவுக்கு வரவேண்டும்.
News January 22, 2026
CM ஸ்டாலினிடம் EPS வலியுறுத்தல்

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண CM ஸ்டாலினை EPS வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் X தளத்தில், டந்த 6 மாதங்களாக வளர்ப்பு கூலியை உயர்த்தக் கோரி போராடி வரும் கறிக்கோழி பண்ணை விவசாயிகளுடன் திமுக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சிலர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வருகிறது. அவர்களை உடனடியாக விடுவித்து, சுமூக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


