News December 29, 2025
தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும்: ஜி.ஆர்.சுவாமிநாதன்

தனக்கும் தீபத்திற்கும் என்ன பொருத்தம் என்றே தெரியவில்லை என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார். நூல் வெளியீட்டு விழா ஒன்றில், குத்துவிளக்கு ஏற்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார். ஆனால், தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும் என நம்புவதாக பேசினார். தி.குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என அவர் உத்தரவிட்டதற்கு எதிராக வழக்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 5, 2026
சரவணம்பட்டியில் கடன் தொல்லையால் தற்கொலை

சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நிஜேஷ் (42). இவர் தொழில் செய்வதற்காக கடன் வாங்கியதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்றிரவு தனது உறவினருக்கு வாய்ஸ் SMS அனுப்பி விட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 5, 2026
தமிழிசையை புறக்கணித்த அமித்ஷா: மாணிக்கம் தாகூர்

புதுக்கோட்டையில் நயினார் பரப்புரை பயண நிறைவு விழாவில் தமிழிசை புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. விழா மேடையில் இருந்த எல்.முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உட்பட ஆண் நிர்வாகிகள் பெயர்களை அமித்ஷா குறிப்பிட்ட நிலையில், பெண்ணான தமிழிசை பெயரை கூறவில்லை என மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். இதுதான் RSS-ன் மனநிலையா, தமிழ் சகோதரிகளுக்கு ஏன் இந்த அவமதிப்பு என்றும் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
News January 5, 2026
இந்த 3 அறிகுறிகள் இருக்கா? சுகர் Confirm!

இந்த 3 அறிகுறிகள் இருந்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு சர்க்கரை நோய் வரலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். 1. கழுத்தை சுற்றி அளவுக்கு அதிகமாக கருமையாக இருத்தல் 2. கண்களுக்கு மேல், கழுத்தில் Warts எனப்படும் மருக்கள் வந்தால் 3. தொப்பை போட்டால் சுகர் வரும் ரிஸ்க் இருக்கிறதாம். இதனை சரி செய்ய நல்ல உணவும், உடற்பயிற்சியும் தேவை. அத்துடன் டாக்டரை அணுகுவது நல்லது. விழிப்புணர்வுக்காக SHARE THIS.


