News December 28, 2025
தீபத்துாண் விவகாரம் மக்கள் மனதில் எரிகிறது: நயினார்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் CM ஸ்டாலின் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தீபத்தூண் தடை மக்கள் மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளதாக கூறிய அவர், தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் அப்பகுதிப் பெண்கள் மிக உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டார். இந்த விவகாரம் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News December 30, 2025
2025-ல் ஹிட் அடித்த சிறு பட்ஜெட் படங்கள்

தமிழ் சினிமாவில் இந்தாண்டு ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் பெரும் ஹிட் அடித்தன. அதில், சில படங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வசூலையும் வாரி குவித்தன. அவை எந்தெந்த படங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல், உங்களுக்கு தெரிந்த படங்கள் வேறு ஏதேனும் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 30, 2025
வாழ்க்கையை மேம்படுத்தும் பழக்கங்கள்

வாழ்க்கையை மேம்படுத்துவது ஒரே நாளில் நடந்துவிடாது. தினசரி ஏற்படும் சிறிய, நிலையான மாற்றங்களின் பலனாக வாழ்க்கை மேம்படுகிறது. தொடர்ச்சியாக நாம் கடைபிடிக்கும் பழக்கம், வழக்கமாக மாறும்போது வாழ்க்கையின் அற்புதம் நிகழும். அவை என்னென்ன பழக்கங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.
News December 30, 2025
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா?

தவெக கூட்டணியில் காங்., இடம்பெறுமா என்ற கேள்வி அண்மையில் எழுந்துள்ளது. இந்நிலையில், திமுகவுடனான 22 ஆண்டு கால கூட்டணியை முறிக்க காங்., தயங்குவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காங்.,-க்கு 50 தொகுதிகளை ஒதுக்க தவெக தயார் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் 41 சீட்கள் பெற வேண்டும் என காங்., உறுதியாக உள்ளது. இதற்கு திமுக உடன்படாவிட்டால் மாற்றம் நிகழலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


