News June 18, 2024

தி.மலை: 12 தாலுக்காக்களில் நாளை ஜமாபந்தி துவக்கம்

image

திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட 12 தாலுகாக்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை (ஜூன் 19) தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்நிகழ்ச்சி 28ஆம் தேதி வரை சனி, ஞாயிறு நீங்கலாக நடைபெற உள்ளது. இதில், வருவாய் நிர்வாக கணக்குகள், தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய் புகார்கள் ஆகியவற்றிற்கு தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 6, 2025

தி.மலையில் குழந்தை வரம் வேண்டி சிறப்பு பூஜை

image

தி.மலை, ஆரணி புதுக்காமூர் பகுதியில் உள்ள பெரிய நாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் வரும் ஜுலை 10 ஆம் தேதி பௌவுர்ணமியன்று குழந்தை வரம் வேண்டி சிறப்பு புத்திரகாமேட்டி யாக பூஜை நடைபெறுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக இப்பூஜை நடைபெறுகிறது. இதில், கலந்துகொண்டால் குழந்தை வரம் நிச்சயம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. *உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*

News July 6, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News July 5, 2025

இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த தி.மலை மாணவி

image

தி.மலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே உள்ள உடையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கவிதா, இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் இணையும் முதல் பழங்குடியின மாணவி என்ற சாதனையை பெற்று அசத்தியுள்ளார். அரசு பள்ளியில் படித்த இவர் 12ஆம் வகுப்பில் 385 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று ஆசிரியர்களின் உதவியுடன், உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமும் மூலம் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!