News November 22, 2025
தி.மலை: வேகமெடுக்கும் தீபத் திருவிழா ஏற்பாடுகள்!

தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவை நவ.24-ல் தொடங்கவுள்ள நிலையில், 4,764-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு 20% கூடுதல் பேருந்துகளும், பெருமளவு பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் & 130 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக 15,000 போலீசார், 1,000-க்கும் மேற்பட்ட CCTV கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
தி.மலையில் அதிரடி கைது!

வந்தவாசி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் சளுக்கை கிராமம் வழியாக ரோந்து சென்றனா். அப்போது இங்கு நின்று கொண்டிருந்த சளுக்கை கிராமத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் (19) போலீஸை கண்டதும் ஒட்டம் பிடித்தார். அவரை பிடித்து விசாரித்தில் 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. வசந்தகுமாா் கைது செய்த போலீஸ் அவரின் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
News February 16, 2026
தி.மலை அருகே மாணவர்கள் துடித்து துடித்து பலி

தி.மலை மாவட்டம் வந்தவாசி அருகே வீடி இடிந்து விழுந்ததில் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகிய இரு சகோதரர்கள் உயிரிழந்தனர். இளங்காட்டில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தாத்தாவின் வீட்டு சீரமைக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக இரு சகோதர்கள் மீது சுவர்கள் இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
News February 16, 2026
தி.மலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

தி.மலையை சேர்ந்த 14 வயது சிறுமி பெற்றோரின் உறவினர் வீட்டில் தங்கி குடியாத்தத்தில் உள்ள பள்ளியில் 9th படித்து வந்துள்ளார். பெற்றோரை பார்ப்பதற்காக தி.மலைக்கு வந்தபோது வயிற்றுவலியின் காரணமாக தி.மலை அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் குடியாத்தம் கமலேஷை (23) கைது செய்த நிலையில் தப்பி ஓட்டிவிட்டார். போலீசார் தேடி வருகின்றனர்


