News September 10, 2025
தி.மலை விவசாயிகளுக்கு ரூ.7.64 கோடியில் நலத்திட்டங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு தோட்டக்கலை மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், ரூ.7.64 கோடி நிதியுடன் 1048 ஏக்கரில் நுண்ணீர் பாசனம், பழம் சாகுபடி, காய்கறி விற்பனை வண்டி உள்ளிட்ட பல திட்டங்கள் சிறு, குறு விவசாயிகளுக்கு 90% மற்றும் பிற விவசாயிகளுக்கு 75% மானியத்தில் வழங்கப்படுவதாக ஆட்சியர் தர்ப்பகராஜ் (செப்டம்பர் 10) அறிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (செப்:10) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News September 10, 2025
தி.மலை: விழிப்புணர்வு பணியில் ஆட்சியர்!

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பாக எச்ஐவி / எய்ட்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். இதில், தி.மலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் இன்று கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
News September 10, 2025
பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று (10.09.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கு நடைபெற்றது. இந்த கூட்டரங்கில் பள்ளி தொடங்கி நூறாண்டு கடந்த பள்ளிகள் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியதைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.