News January 27, 2026
தி.மலை: விடுமுறையில் வேலை; பாய்ந்தது நடவடிக்கை!

குடியரசு தினவிடுமுறை நாளான நேற்று சட்டவிதிகளை மீறி தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 70 நிறுவனங்கள் மீது தொழிலாளர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தி.மலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரவி ஜெயராம் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது 70 நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறி தொழிலாளர்களை பணிக்கு வர சொன்னதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
வந்தவாசியில் பரபரப்பு!

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தெள்ளாா் அருகே தெய்யார் மடம் கிராமத்தில் மது விற்ற செல்வமணி (47) என்பவரை தெள்ளாா் போலீஸாரும், ஆலத்தூா் கூத்துமேடை அருகே மது விற்ற வினோத் (31) என்பவரை கீழ்க்கொடுங்காலூா் போலீஸாரும் ரோந்து பணியின் போது பிடித்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News January 29, 2026
தி.மலை: பிரபலங்கள் மீது வழக்கு!

தி.மலை அண்ணாமலையார் மலை மீது ஏற வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் அருண்பிரசாத் ஆகியோர் தடையை மீறி உச்சிக்குச் சென்று வீடியோ வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கையுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
News January 29, 2026
தி.மலை: வீடு புகுந்து துணிகர செயல்!

செய்யாறு அருகே பைங்கினர் பகுதியில், ஜெயலட்சுமி என்பவரின் வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருடப்பட்டது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார், இது தொடர்பாக விண்ணவாடி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒன்றரை பவுன் நகை மீட்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


