News September 8, 2025

தி.மலை வழக்கறிஞர் சங்கங்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு

image

வழக்கறிஞர் சேம நலநிதியை உயர்த்தக்கோரியும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், வழக்கறிஞர் போராட்ட உரிமைக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோளை ஏற்று திருவண்ணாமலை வழக்கறிஞர் சங்கங்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு அறிவித்துள்ளனர்.

Similar News

News September 9, 2025

தி.மலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 8, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்.,8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 8, 2025

தி. மலையில் சக்திவாய்ந்த முருகன் ஆலயம்!

image

தி.மலை, சோமாசிபாடியில் குன்றின் மீதுள்ள பாலசுப்பிரமணி கோயிலில் 3 தீர்த்தங்கள் உள்ளது. கிருத்திகை தினங்களில் மாலை நேரத்தில் தீர்த்தத்தில் செங்கழுநீர் கொடி வேர்ப்பாகத்தில் மலர்ந்துள்ள பூவினை தேடுவர். சிறிய அரும்பு ஒன்று கிடைக்கும். இந்த பூ பச்சை நிறத்தில் இருந்தால் நல்ல மழை பெய்யும் என்று நம்பப்படுகிறது. இந்த பூ எடுக்கும் நிகழ்வை கண்டால் சொந்த வீடு அமையும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!