News February 28, 2026
தி.மலை: லஞ்சம் பெற்ற நில அளவையர் அதிரடி கைது

போளூர் தாலுகா அலுவலகத்தில் டவுன் நில அளவையராக பணியாற்றி வரும் சக்திவேல் நேற்று (பிப். 27) லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். போளூர் பகுதியை சேந்த சின்னராசு என்பவர், தனது பாகப்பிரிவினை செய்யப்பட்ட வீட்டை அளக்க அணுகியபோது சக்திவேல் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான குழுவினர் அவரை கைது செய்தனர்.
Similar News
News March 2, 2026
சந்திர கிரகணத்தின் போது சாமி தரிசனத்துக்கு அனுமதி

தி.மலை: நாளை மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி இரவு 7.53 மணிக்கு முடிவடைகிறது. சந்திர கிரகணம் நிகழும் நாளன்று பெரும்பாலான கோவில்களில் நடை அடைபது வழக்கம். ஆனால் திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில் சந்திர கிரகணத்தின் போது நடை அடைக்காமல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு. அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 2, 2026
தி.மலை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 2, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


