News August 26, 2025

தி.மலை: மீண்டும் ஒரு திருப்பூர் ரிதன்யா சம்பவம்

image

தி.மலை அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி மகாலட்சுமி. அருண் ஜெர்மனியில் வேலை பார்த்து வரும் நிலையில், மகா லட்சுமியிடம் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 26, 2025

தி.மலை: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க*

News August 26, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டிகள்

image

திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் மாவட்ட அளவிலான “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள் 2025 இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்துகொண்டு போட்டியை பார்வையிட்டார்.

News August 26, 2025

தி.மலை: தேர்வில்லாமல் அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

image

தி.மலை மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். SHARE பண்ணுங்க! விபரங்களுக்கு <<17520443>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க.

error: Content is protected !!