News November 15, 2025
தி.மலை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க விரும்புவோர் www.agrimark.tn.gov.in இணையதளத்தில் நவம்பர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மத்திய அரசின் மானியத்துடன் அமைக்கப்பட்ட சேமிப்பு கிடங்கு தயார் நிலையில் உள்ளது. தேவைக்கேற்ப குத்தகைக்கு வழங்க தொழில் முனைவோர் அழைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
தி.மலை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன் ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு, பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
தி.மலை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

தி.மலை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
தி.மலை: EB பிரச்னைகளுக்கு இனி ஈஸியான தீர்வு!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே, அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


