News June 9, 2024
தி.மலை மாவட்டத்தில் 267 தேர்வு மையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், மாநிலம் முழுவதும் இன்று குரூப்-4 தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 267 தோ்வு மையங்களில் 73, 224 போ் எழுதுகின்றனா் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
தி.மலை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

திருவண்ணாமலை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News January 25, 2026
தி.மலை: ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை, ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் நரேஷ் (18), நிலத்தில் இருந்த தாத்தாவிற்கு உணவு கொண்டு சென்றபோது, விருப்பாட்சிபுரம் ஏரியில் கால் கழுவ முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 25, 2026
தி.மலையில் பரபரப்பு: மாணவி திடீர் மாயம்!

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவைச் சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவி, நேற்று முன்தினம் கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், மாணவியின் தாயார் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


